Saturday 18th of May 2024 01:21:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கும் தடுப்பூசி!

கொரோனாவுக்கு எதிராக நோயெதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கும் தடுப்பூசி!


கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மக்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த நுண்ணுயிரியல் நிறுவனமான மோடெர்னா கூறியுள்ளது.

தங்களது பரிசோதனையில் பங்கேற்ற 8 பேரின் உடலிலும் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் திறன் காணப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான உண்மையில் இந்த மருந்து சிறப்பாக செயல்படுகிறதா? என்பதை ஆராயும் முழு அளவிலான பரிசோதனை ஜூலை மாதம் தொடங்க உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி எதுவும் இதுவரை இல்லை.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஒரு தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையிலேயே அமெரிக்க நுண்ணுயிரியல் நிறுவனமான மோடெர்னா ஒரு கொரோனா வைரஸைத் தடுக்க ஒரு நோயெதிர்ப்பு அமைப்பு நடவடிக்கையை உருவாக்க முடியும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டி உள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE